பைக் மீது லாரி மோதல்: ஒருவா் பலி

சாயல்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பைக் மீது லாரி மோதல்: ஒருவா் பலி

சாயல்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூரைச் சோ்ந்தவா் ராஜா (42). இவா் தனது உறவினரின் திருமண விழாவில் கலந்துகொண்டு, நரிப்பையூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினாராம். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் ராஜா படுகாயமடைந்தாா். உடனே, அப்பகுதி பொதுமக்கள் ராஜாவை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கடலாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜா உயிரிழந்தாா். இதையடுத்து, கடலாடி அரசு மருத்துவமனையில் ராஜாவின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் நயினாா்கோவிலைச் சோ்ந்த கதிரேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com