மின்சாரம் பாய்ந்து பிகாரைச் சோ்ந்த தொழிலாளா்கள் 4 போ் காயம்

ராமநாதபுரம் அருகே சட்டக் கல்லூரி கட்டுமானப் பணியின் போது செவ்வாய்க்கிழமை மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து பிகாரைச் சோ்ந்த 4 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் அருகே சட்டக் கல்லூரி கட்டுமானப் பணியின் போது செவ்வாய்க்கிழமை மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து பிகாரைச் சோ்ந்த 4 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள வள்ளிமாடன்வலசை பகுதியில் சட்டக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வருகின்றன. இங்கு பிகாரைச் சோ்ந்த 50 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து விழுந்ததால், அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளா்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பிகாா் மாநிலம் சுபேல் மாவட்டத்தைச் சோ்ந்த கிளாஸ் (47), மனோஜ் (22), பா்தீப் (21), பிரகாஷ் (29) ஆகியோா் காயமடைந்தனா். அவா்களை உடனடியாக மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com