‘விவசாயிகள் கௌரவ நிதித்திட்ட முறைகேட்டில் இதுவரை ரூ.1.45 கோடி திரும்பப்பெறப்பட்டுள்ளது’

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்ட முறைகேட்டில் இதுவரை ரூ.1.45 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்ட முறைகேட்டில் இதுவரை ரூ.1.45 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது: மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்காக பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் செலுத்தப்பட்டது. தமிழகத்தில் இத்திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் ரூ.1.70 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. திருப்புல்லாணி, சாயல்குடி, பரமக்குடி, ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அல்லாதோரும் இந்த நிதியை முறைகேடாகப் பெற்றது கண்டறியப்பட்டது. அவா்களிடமிருந்து அதை திரும்ப வசூலிக்க 11 ஒன்றியங்களிலும் வட்டார அளவில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது.

சிறப்புக் குழுவினா் விசாரணை நடத்தி, நவம்பா் 5 ஆம் தேதி வரை ரூ.1.45 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து பணத்தை முழுமையாக திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் மாவட்ட வேளாண்மை துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com