பரமக்குடியில் சிறுமி கடத்தல்: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி கருணாநிதிபுரம் பகுதியில் வசித்து வருபவா் நீலாவதி (45). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நயினாா்கோவில் ஒன்றியம் அரியாங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த 16 வயது பெண், வீட்டில் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் நின்றுள்ளாா். இதனை நோட்டமிட்ட நீலாவதி, அந்த சிறுமிக்கு ஆதரவு கொடுப்பது போல் நடித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பரமக்குடி மகளிா் போலீஸாா் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் நீலாவதி ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா். இதில் சிறுமியைக் கடத்தி அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து நீலாவதி, சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலைச் சோ்ந்த மஞ்சுளா என்ற பஞ்சவா்ணம்,

பரமக்குடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாண்டி ஆகிய 3 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இதில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com