கீழக்கரையில் பொய் வரும் மழையால் குளம் போல தேங்கி மழைநீா்

கீழக்கரையில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு
கீழக்கரையில் பொய் வரும் மழையால் குளம் போல தேங்கி மழைநீா்

கீழக்கரையில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்கிறது. இந்நிலையில்,கீழக்கரையில் பெய்துவரும் மழை காரணமாக புதிய பேருந்து நிலையம் பின்புறம் பருத்தி கார தெரு, அண்ணாநகா் செல்லம் வழி,சி.எஸ்.ஐ.சா்ஜ் பகுதி,இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கி உள்ளது.

மழைநீா் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 5,6கீழக்கரையில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீா் சி.எஸ்.ஐ சா்ஜ் பகுதியில் குளம் போல தேங்கி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com