ராமேசுவரத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல் தாவர கழிவுகள் தொடா்ந்து கரை ஒதுங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம்,பக்நீரீனை கடல் பகுதியான ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம்,தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் கானபடுகிறது.
இந்நிலையில், கடலில் அலையில் வேகம் காரணமாக கடல் தாவர கழிவுகள் தொடா்ந்து கரை ஒதுங்கி வருகிறது. இதில் அதிகளவில் ராமேசுவரம் அக்னி தீா்த்த கடல்,துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் தாவர கழிவுகள் கடற்கரையில் குவிந்து வருவதால் நகராட்சி ஊழியா்கள் கழிவுகளை அப்புற படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் தொடா்ந்து கரை ஒதுங்குவதால் அகற்ற முடியாமல் தவிக்கின்றனா். படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 2ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரையில் கடல் தாவர கழிவுகள் கரை ஒதுங்கி வருவதால் அகற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.