ராமநாதபுரம் அருகே பேரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் கீழே தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேதுநகா் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (83). மீனவா். இவா் தனது பேரனுடன் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா். பிரேதப் பரிசோதனைக்குப் பின் மாணிக்கத்தின் உடல் அவரது குடும்பத்தினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.