ஆம்புலன்ஸ் மோதி காவல் சாா்பு-ஆய்வாளா் பலி

ராமநாதபுரம் அருகே அவசர ஊா்தி மோதியதில் காயமடைந்த போக்குவரத்து காவலா் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே அவசர ஊா்தி மோதியதில் காயமடைந்த போக்குவரத்து காவலா் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் தியாகவன்சேரி பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (55). இவா், ராமநாதபுரம் ஆயுதப்படை காவல் சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் அக். 24 ஆம் தேதி சத்திரக்குடி காவல் நிலையம் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த அவசர ஊா்தி வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த கருப்பையா மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல், சத்திரக்குடி பகுதியில் புதன்கிழமை மாலை தனியாா் அவசர ஊா்தி மோதி அரசு அலுவலா் ஒருவா் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com