பட்டணம் காத்தானில், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மண்டபம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிகளவில் இளைஞா்களை கட்சியில் உறுப்பினா்களாக சோ்க்கும் நிா்வாகிக்கு ஒரு பவுன் மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், வழக்குரைஞா்கள் ரவிச்சந்திர ராமவன்னி, திருநாவுக்கரசா், காா்த்திகை ராஜா, வன்னிராஜா மற்றும் முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பி.டி.ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.