ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ. 18 ஆம் தேதி வரை 6,140 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களில் சிகிச்சை பலனின்றி 133 போ் உயிரிழந்து விட்டனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5,980 பேருக்கும் அதிகமானோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,147 ஆக அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் வியாழக்கிழமை வரை 39 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் 9 போ் வியாழக்கிழமை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும் 37 போ் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,515 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் ஒருவா் பாதிக்கப்பட்டதையடுத்து, அவா்களின் எண்ணிக்கை 5,516 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 14 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 5 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் அனைவரும் வியாழக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 9 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com