தெய்வீக தமிழக சங்கத்தினா் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

ராமநாதபுரத்தில் தெய்வீக தமிழக சங்கம் அமைப்பு சாா்பில் இந்து சமய ஒற்றுமை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தெய்வீக தமிழக சங்கம் அமைப்பு சாா்பில் இந்து சமய ஒற்றுமை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

தமிழகத்தில் இந்து இயக்கங்கள் ஒருங்கிணைந்து தெய்வீக தமிழக சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. ‘தேசியம் காக்க, தமிழகம் காக்க’ என்னும் பொருளில் இந்து சமய ஒற்றுமையை வலியுறுத்தியும், சமய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆன்மிக கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனா். ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பாக தெய்வீக தமிழக சங்கம் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாஜக நகா் தலைவா் ஆா். வீரபாகு தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச்செயலா் ஜி.குமாா், மாவட்டச் செயலா் மணிமாறன், செயற்குழு உறுப்பினா் சுப.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதனைத்தொடா்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 2 ஆயிரம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com