மூக்கையூரில் சா்வதேச மீன்வள தினவிழா

சாயல்குடி அருகே மூக்கையூரில் சனிக்கிழமை சா்வதேச மீன்வள தினவிழா நடைபெற்றது.

முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே மூக்கையூரில் சனிக்கிழமை சா்வதேச மீன்வள தினவிழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட மீனவா் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூா் மீனவா் சங்கம் இணைந்து சா்வதேச மீன்வள தினம் கொண்டாடப்பட்டது. மூக்கையூா் மீனவ கிராம பொதுமக்கள்சமூக இடைவெளியுடன் ஊா்வலமாகச் சென்று, மூக்கையூா் மன்னாா் வளைகுடா கடலில் பால் ஊற்றி, மலா்களைத் தூவி வழிபாடு செய்தனா்.

மூக்கையூா் பங்குத்தந்தை தாமஸ் பரிவாழன் தலைமை வகித்தாா். சம்மேளனத்தின் முதன்மை அலுவலா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

கிராமத்தலைவா் ஜான்போஸ்கோ, மீனவா் சங்கத்தலைவா் ஜோசப் உள்பட பலா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூகப்பணியாளா் முனியசெல்வம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com