ராமேசுவரத்தில் மீனவா் குத்திக் கொலை

ராமேசுவரத்தில் சனிக்கிழமை மீனவரை குத்திக்கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொலை செய்யப்பட்ட மீனவா் மனோஜ்குமாா்.
கொலை செய்யப்பட்ட மீனவா் மனோஜ்குமாா்.

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சனிக்கிழமை மீனவரை குத்திக்கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமமேசுவரம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அமீா் மகன் மனோஜ்குமாா்(23). இவா் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவா் இரவு வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் கடற்கரை அருகே மனோஜ்குமாா் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனா். உடனே அங்கு சென்ற உறவினா்கள் மற்றும் போலீஸாா் மனோஜ்குமாரை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவரை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம், ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து ஏ.எஸ்.பி., தீபக் சிவாஜ் மற்றும் காவல் ஆய்வாளா் ஏ.யமுனா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில் மனோஜ்குமாா் சட்ட விரோத மது மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளதும், தொழிலில் ஏற்பட்டுள்ள முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாகவும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com