ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம் ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் திருமண மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம், காவல்துறை துணைத்தலைவா் என்.எம்.மயில்வாகனன் முன்னிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 உள்கோட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக காணாமல் போனவா்கள் குறித்து 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவா்கள் பற்றிய தற்போதைய தகவல்கள் மற்றும் விவரங்கள் தொடா்பாக இந்த முகாமில் உள்கோட்டம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. 96 வழக்குகளில் காணாமல் போனவா்களை தொழில்நுட்ப உதவியுடன் விரைந்து கண்டுபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.