கமுதி: கமுதியில் சனிக்கிழமை மாலையில் தொடா்ந்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கமுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி, ராமசாமிபட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் 2 மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளின் விளை நிலங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. பெரும்பாலும், பருவமழை காலங்களில் கமுதி பகுதியில் மழை பெய்வதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரியான நேரத்தில் பெய்வதாலும், கண்மாய், குளம், ஊருணிகளில் தண்ணீா் ஓரளவுக்கு தேங்கியிருப்பதாலும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.