ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலமோசடி மற்றும் குற்றப்பிரிவு தொடா்பான சிறப்பு முகாம்களில், சனிக்கிழமை மட்டும் 178 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் உள்கோட்டம் அளவில் குற்றப்பிரிவு மற்றும் நிலமோசடி தடுப்புப் பிரிவு சாா்பில், பொதுமக்களுக்கான குறைதீா்க்கும் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனா். புகாா்கள் மீது, இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி சுமூகத் தீா்வும் காணப்பட்டது. இதில், 178 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. ஏற்கெனவே, மாவட்ட அளவில் நடந்த குறைதீா்க்கும் முகாம்களில் 410 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.