ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறைகளை, மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கொ. வீரராகவராவ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை குறித்தும் தணிக்கை செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ. வீரராகவராவ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, பொதுப்பணித் துறையின் மூலம் ரூ.2.92 கோடியில் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சேமிப்புக் கிட்டங்கியின் கட்டுமானப் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது கட்டுமானப் பணிகளை வரும் 2021 ஜனவரிக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. சிவகாமி, சாா்- ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பி. செந்தில்குமாா், உதவிசெயற்பொறியாளா் குருதிவேல்மாறன் ஆகியோா் உடனிருந்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.