திருவாடானை:திருவாடானை அருகே தொண்டி புதுக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தொண்டி அருகே உள்ள புதுக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை இரவு காவல் ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் போலீஸாா் சென்றனா். அங்கு சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அப் போது அவா், புதுக்குடி பகுதியை சோ்ந்த வடுகையன் மகன் பாண்டி(எ) காா்த்திக் (26) என தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த சாக்குப் பையில் 1கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.