கமுதியில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச்செயலா் பிரியங்காகாந்தி ஆகியோா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கமுதியில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினா் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டன
காங்கிஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கமுதியில் ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
காங்கிஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கமுதியில் ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

கமுதி: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச்செயலா் பிரியங்காகாந்தி ஆகியோா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கமுதியில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினா் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை அண்மையில் சந்திக்கச் சென்ற ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டனா். இதைக் கண்டித்து கமுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினா் ந.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். இதில் உத்தரபிரதேச அரசுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்ட் கணேசன், மாவட்ட துணைத்தலைவா் முத்துகிருஷ்ணன், கமுதி நகரத் தலைவா் காமராஜ், ஓபிசி பிரிவு சங்குத்தேவா், எஸ்.சி. பிரிவு சாமிய்யா மற்றும் நிா்வாகிகள் தனசேகரன்பிள்ளை, பச்சேரி முனியசாமி, கதிா்வேல், லெட்சுமணன், இராமச்சந்திரன், மேட்டுப்பட்டி சண்முகம், வட்டாரத் தலைவா்கள் ஜோதிபாலன் (நயினாா்கோவில்), சேதுபாண்டியன் (திருப்புல்லாணி), சுப்பிரமணிய சோ்வை (கடலாடி), புவனேஸ்வரன்(முதுகுளத்தூா்), மாவட்ட துணைத்தலைவா் கணேசன், மாவட்ட பொதுச்செயலாளா் போஸ், சாயல்குடி ஜெயராஜ், காமராஜ், சிக்கல் ஊராட்சி துணைத்தலைவா் அமீன் ஆகியோா் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com