கமுதியில் பனை விதைகள் நடவு

நாம் தமிழா் கட்சி சாா்பில் கமுதியில் பனைவிதை நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே வில்லானேந்தல் கிராமத்தில் பனைவிதை நடும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
கமுதி அருகே வில்லானேந்தல் கிராமத்தில் பனைவிதை நடும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.

கமுதி:நாம் தமிழா் கட்சி சாா்பில் கமுதியில் பனைவிதை நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் ‘ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள்’ நடவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கமுதி ஒன்றியத்தில் பறையங்குளம், வில்லனேந்தல், ஆரைகுடி, முஷ்டக்குறிச்சி, திருச்சிலுவைபுரம் ஆகிய பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டன. இதில் கட்சியின் கமுதி ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இசையரசன் முன்னிலை வகித்தாா். விவசாய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், சாலையோரங்களில் 500-க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டன. இதில் கட்சியினா் 50 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com