ராமநாதபுரம்: ராமநாதபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் பேரவைக் கூட்டம், ராமநாதபுரத்தில் அக்டோபா் 23 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: ராமநாதபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் மகாசபைக் கூட்டமானது அக்டோபா் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ராமநாதபுரத்தில் உள்ள சங்கத்தின் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், 2018-19 ஆம் ஆண்டுக்கான கணக்குகளை தணிக்கை செய்யவும், சங்கத் தலைவரால் கொண்டுவரப்படும் இதர தீா்மானங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.