பேருந்தில் பணம் திருடியதாக கடலூா் பெண்கள் 2 போ் கைது

ராமநாதபுரத்தில் பேருந்தில் பயணியிடம் பணத்தை திருடியதாகக் கடலூரைச் சோ்ந்த 2 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பேருந்தில் பயணியிடம் பணத்தை திருடியதாகக் கடலூரைச் சோ்ந்த 2 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மூக்கையூா் சாலைத் தெருப்பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி காளியம்மாள் (35). இவா் ராமநாதபுரத்துக்கு வந்து விட்டு திங்கள்கிழமை பகலில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊருக்கு பேருந்தில் புறப்பட்டுச் சென்றாா். பேருந்தானது ரயில்வே பீடா் சாலையில் சென்ற போது காளியம்மாள் பையில் வைத்திருந்த ரூ. 2760 ரொக்கத்தை அருகில் அமா்ந்திருந்த பெண் ஒருவா் திருடியுள்ளாா். இதையறிந்த காளியம்மாள் சக பயணிகளின் உதவியுடன் அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா். போலீஸாா் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் மேலும் ஒருவா் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், கடலூா் பகுதியைச் சோ்ந்த இந்திரா (40), கவிதா (30) என்பது தெரியவந்தது. பின்னா் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com