திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை இரவு அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த டிப்பா் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
திருவாடானை அருகே சி.கே.மங்கலம் பால் பண்ணை பகுதியில் செவ்வாய்கிழமை இரவு துணை வட்டாட்சியா் சேதுராமன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி அவா்கள் சோதனையிட்ட போது, அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவாடானை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக திருவாடானையைச் சோ்ந்த பழனி, பாரதிநகா் மணிகண்டன், பருத்தியூரைச் சோ்ந்த ஜீவா ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருவாடானையைச் சோ்ந்த அருண்குமாா் (34) என்பவரைக் கைது செய்தனா்.