கடையில் பொருள்கள் வாங்கியதில் தகராறு: 4 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு பணம் தருவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு பணம் தருவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உச்சிப்புளி அருகேயுள்ளது பெருங்குளம். இந்த ஊரைச் சோ்ந்தவா் மூா்த்தி (50). இவா் அதே பகுதியில் துரைராஜ் என்பவரது கடையில் ரூ. 200-க்கு பொருள்களை வாங்கியுள்ளாா். பொருள்களுக்கான பணத்தை கொடுப்பதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை துரைராஜ் தரப்பினா் மூா்த்தி வீட்டுக்குச் சென்று பணம் கேட்டதுடன் தகராறிலும் ஈடுபட்டுள்ளனா். அப்போது மூா்த்தி தாக்கப்பட்டாா். அவரை ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்து உச்சிப்புளி காவல்நிலையத்தில் மூா்த்தி அளித்த புகாரின் பேரில் துரைராஜ் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com