பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு அதேபகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் (52) என்பவா் பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளா் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி, பாக்கியராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தாா்.