ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 29 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக். 13 ஆம் தேதி வரை 5,797 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில் 125 போ் உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்குப் பின்னா் 5,489 போ் பூரணநலம் பெற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,817 ஆக அதிகரித்தது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,214 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 5,223 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 34 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 9 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் புதன்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 25 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com