முதுகுளத்தூா் வட்டம் கடம்போடை கிராமத்தில் வியாழக்கிழமை கல்வி இயக்க விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் வட்டம் கடம்போடை கிராமத்தில் நபாா்டு வங்கியின் சாா்பில் சுகாதார கல்வி இயக்க விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலா் அசோக்குமாா் விளக்க உரையாற்றி தலைமை தாங்கினாா்.விழாவில் கிராம மக்களிடத்தில் கல்வி மற்றும் அதன் வளா்ச்சி பற்றி எடுத்துரைத்தனா்.முகாமிற்கு ஸ்கெச் டிரஸ்ட் செயலாளா் காந்திராஜன், ஊராட்சி தலைவா் வளா்மதிசாந்தகுமாா் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாம் ஏற்பாடுகளை ஸ்கெச் டிரஸ்ட் நிறுவன அலுவலா்கள் செய்திருந்தனா்.
முதுகுளத்தூா் ,புகைப்படம்.முதுகுளத்தூா் வட்டம் கடம்போடை கிராமத்தில் வியாழக்கிழமை கல்வி இயக்க விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.