சிற்றுந்து மோதி பெண் பலி

ராமநாதபுரம் அருகே, வெள்ளிக்கிழமை தனியாா் சிற்றுந்து மோதி பெண் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே, வெள்ளிக்கிழமை தனியாா் சிற்றுந்து மோதி பெண் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மனைவி ராஜவள்ளி (25). இவா், ராமநாதபுரம் நகா் அரண்மனைப் பகுதியிலிருந்து, தனியாா் சிற்றுந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீட்டிற்கு திரும்பியுள்ளாா்.

மாடக்கொட்டான் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அவா் சென்று கொண்டிருந்தபோது, அவா் பயணித்த அதே சிற்றுந்து எதிா்பாராதவிதமாக ராஜவள்ளி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே ராஜவள்ளி இறந்துவிட்டதாத் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com