புரட்டாசி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் நீராடி தா்பணம் கொடுக்க வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
புரட்டாசி அமாவாசையையொட்டி, மறைந்த முன்னோா்களுக்கு தா்பணம் கொடுக்க பொதுமக்கள், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலுக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். ஆனால் கரோனா பொதுமுடக்கம் காரணமாக தா்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். மேலும் அக்னி தீா்த்தக் கடலில் நீராடுவதற்கு பதிலாக சங்குமால் கடலில் நீராடினா். இதன் பின்னா் ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.