ராமநாதபுரம்
முதுகுளத்தூா் பேரூராட்சி சந்தை ரூ. 35 லட்சத்துக்கு ஏலம்
முதுகுளத்தூா் பேரூராட்சி சந்தை ரூ. 35 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டது.
முதுகுளத்தூா் பேரூராட்சி சந்தை ரூ. 35 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டது.
கரோனா தொற்று காரணமாக முதுகுளத்தூா் சந்தை ஏலம் விடாமல் நிலுவையில் இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை சந்தை ஏலம் விடப்படுவதாக பேரூராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் சி. மாலதி தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதில் 11 போ் கலந்து கொண்டனா். அதில் ஏனாதியை சோ்ந்த குணசேகரபாண்டி என்பவா் ரூ. 35 லட்சத்துக்கு ஏலம் எடுத்தாா்.