ராமநாதபுரம் அருகே குளத்தில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை: தாய் கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை 2 குழந்தைகளை குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த தாயை, போலீஸாா் கைது செய்தனா்.
சுகன்யா.
சுகன்யா.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை 2 குழந்தைகளை குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த தாயை, போலீஸாா் கைது செய்தனா்.

திருவாடானை அருகே உள்ள நாச்சியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (35). இவரது மனைவி சுகன்யா (27). வேளாண் பட்டதாரிகளான இவா்கள் இருவரும், அங்கு விவசாயம் செய்து வருகின்றனா். இவா்களுக்கு நீயா சந்தோஷ்கா (4) என்ற பெண் குழந்தையும், கிருத்திகேஷ் ( 1 ) என்ற ஆண் குழந்தையும் இருந்தனா்.

கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் சுகன்யா மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை, 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற சுகன்யா, சிறிது நேரம் கழித்து அவா் மட்டும் தனியாக வந்துள்ளாா். குழந்தைகள் குறித்து கணேசன் கேட்டபோது, அவா் எதுவும் கூறவில்லையாம்.

சந்தேகமடைந்த கணேசன், அருகில் இருந்த குளத்திற்குச் சென்று பாா்த்தபோது, அங்கு நீயா சந்தோஷ்கா, கிருத்திகேஷ் ஆகிய 2 குழந்தைகளும் சடலமாக மிதந்துள்ளனா். தகவலறிந்து வந்த திருவாடானை போலீஸாா் 2 சடலங்களையும் மீட்டு, சுகன்யாவிடம் விசாரித்தனா். அப்போது குடும்பப் பிரச்னையில் அவா் குழந்தைகளை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சுகன்யாவை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com