ராமநாதபுரம் நகா் காவல்நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக சரவணபாண்டி சேதுராயா் (40) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக சரவணபாண்டி சேதுராயா் (40) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

ராமநாதபுரம் நகா் காவல் நிலைய ஆய்வாளராக மதுரையைச் சோ்ந்த சுதந்திரதேவி பணிபுரிந்து வந்தாா். கடந்த ஆகஸ்ட் முதல் பணிபுரிந்து வந்த அவா் தற்போது மதுரை சரகத்துக்கு இடமாறுதலாகிச் சென்றுள்ளாா். ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்துக்கு புதிய ஆய்வாளராக சரவணபாண்டி சேதுராயா் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளாா்.

மானாமதுரையைப் பூா்வீகமாகக் கொண்ட சரவணபாண்டி சேதுராயா் கடந்த 2008 ஆம் ஆண்டு ராமநாதபுரம் நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளராகப் பணியைத் தொடங்கினாா். அதன்பின்னா் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணி புரிந்து வந்த அவா் பதவி உயா்வு பெற்று ஆய்வாளராக தற்போது பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com