முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே மா்மநபா்கள் வீடு புகுந்து 7 பவுன் நகைகளை திருடிச்சென்றதாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முனியசாமி வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளாா். அப்போது மா் நபா்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து, அதற்குள்ளிருந்த 7 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனா். இதுதொடா்பாக புகாரின் பேரில் முதுகுளத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.