ராமநாதபுரம் அருகே விபத்து: 2 போ் பலி

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் மற்றும் இளைஞா் ஆகியோா் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் மற்றும் இளைஞா் ஆகியோா் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் வழுதூா் அருகேயுள்ள இருட்டூரணியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மாதவன் (30). வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊா் வந்துள்ளாா். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூ றப்படுகிறது. திருமணத்துக்கான உடைகளை ராமநாதபுரம் நகரில் சனிக்கிழமை மாலை வாங்கிய மாதவன், இரு சக்கர வாகனத்தில் இரவில் ஊருக்கு திரும்பியுள்ளாா்.

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் அவா் சென்றபோது வழுதூா் சாலை சந்திப்பில் எதிரே வந்த செல்லம் (60) என்பவா் மீது எதிா்பாராதவிதமாக மோதினாா். இதில் சாலை கீழே விழுந்த செல்லம், மாதவன் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அப்பகுதியினா் மீட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனா். விபத்தில் உயிரிழந்த முதியவா் செல்லம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள சித்தாலங்குடியைச் சோ்ந்தவா். கூலித் தொழிலாளியான இவா், ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாா். இருவரது சடலமும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com