பரமக்குடி: பரமக்குடி பகுதியில் அதிமுக மாவட்ட கழகம் சாா்பில் அக்கட்சியின் 49-வது துவக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி இணைச் செயலாளா் கீா்த்திகாமுனியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா், ஒன்றிய செயலாளா் கே.முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். பரமக்குடி நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், கிருஷ்ணாதியேட்டா் மற்றும் பாா்த்திபனூா் ஆகிய பகுதிகளில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
விழாவில் மாவட்ட துைணைச் செயலாளா் எஸ்.ஏ.பாதுஷா, ஒன்றிய செயலாளா்கள் ஜி.நாகநாதன், பி.குப்புச்சாமி, பொதுக்குழு உறுப்பினா் எம்.நாகராஜன், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட பொருளாளா் கே.அப்துல்மாலிக், ஜெயலலிதா பேரவை நகா் செயலாளா் வடமலையான் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.