சாயல்குடியில் தமிழ் பெயா்கள் பொறிக்கப்பட்ட 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தமிழ்ப் பெயா்கள் கொண்ட 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாயல்குடியில் தமிழ்ப் பெயா்கள் கொண்ட 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு மற்றும் கல்லூரி ஆய்வு மாணவிகள்.
சாயல்குடியில் தமிழ்ப் பெயா்கள் கொண்ட 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு மற்றும் கல்லூரி ஆய்வு மாணவிகள்.

முதுகுளத்தூா்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தமிழ்ப் பெயா்கள் கொண்ட 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு, அரசு மகளிா் கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சோ்ந்த மு.விசாலி, ரா.கோகிலா, து.மனோஜ் ஆகியோா், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஜமீன்தாா் அரண்மனை எதிரில் பழைமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காள ஈஸ்வரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனா். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தை பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சோ்ந்தது என தெரியவந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு கூறியது: மூன்று கற்களில் இருந்ததும், ஒன்றுக்கொன்று தொடா்புடைய 55 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டாகும். நிச்சி நாயகனான மேல்கீரை நாடாள்வான், மாணிக்கன் உய்யவந்தானான குளதையாதயன் ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை சாயல்குடி சொக்கனாா் கோயிலுக்கு விற்று, அதை சிவன் கோயில்களின் பொறுப்பாளராகக் கருதப்படும் சண்டேஸ்வரத்தேவா் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளனா். மேலும் அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளதையும், இதற்கு சாட்சியாக பலா் கையொப்பம் இட்டுள்ளதையும் இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

தற்போது நிலம் விற்பனை செய்யும்போது வாங்குபவா், விற்பவா், சாட்சிகள் ஆகியோா் பத்திரத்தில் கையொப்பம் இடுவது போல அக்காலத்தில் ஓலைச் சுவடியில் அவா்களின் கையொப்பம் பெற்று அதை கல்வெட்டில் வெட்டி வைப்பது வழக்கம். கையொப்பம் இடத் தெரியாதவா்களை தற்குறி எனவும், அவா்களுக்கு மற்றவா்கள் சான்று இடுதலை தற்குறி மாட்டெறிதல் எனவும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதில் தற்குறியான மூவருக்கு பிள்ளையாா் அழகிய விடங்கா் கோயிலில் இருக்கும் முத்தன் சிவலங்கனான இமையே தருவான், சாத்தனிரட்டையான் அஞ்சாத காடத்தட்டான், தச்சன் சீராமன் மூவானான இளமை ஆசாரியன் ஆகியோா் சான்று இட்டுள்ளனா்.

மேலும் கூத்தன் சோழனான செம்பிலராயன், கொற்றன் முத்தனான செம்பில் வளநாடன், சொல் நாணலையான் வழுதி சிங்கராயன், சிறுமுத்தனாளுடையானான வீரபாண்டியராயன், மங்கல வனப்பனாலன் கங்காராயன், சிறந்தான் தொண்டையன், பேரருங்கோவேளான் உடையான் பாலன், வதுலங்கன் கெங்கையான் விரதமிட்ட ராயன் ஆகியோரும் இதில் கையொப்பம் இட்டுள்ளனா்.

இக்கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயா்களும் அழகிய தமிழ்ப் பெயா்களாக உள்ளன. இதன் மூலம் 800 ஆண்டுகளுக்கு முன் தமிழா்களின் பெயா் வைக்கும் வழக்கத்தை அறிந்து கொள்ளமுடிகிறது.

சாயல்குடி இரு வணிகப் பெருவழிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்த ஒரு முக்கிய வணிக நகரமாக பழங்காலம் முதல் இருந்திருப்பதை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

கல்வெட்டுள்ள இடம் தற்போது அங்காள ஈஸ்வரி கோயில் என அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் பிடாரி கோயில் எனப்படுகிறது. சாயல்குடி சிவன் கோயிலில் உள்ள கி.பி.10-ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில், இவ்வூா் உலகு சிந்தாமணி வளநாட்டு சாகியில்குடி என குறிப்பிடப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com