இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் தந்தையும் கைது

திருவாடானை அருகே தாய் இரண்டு குழந்தைகளை தாய் நீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் திடீா் திரும்பமாக தந்தையும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கைது செய்யப்பட்ட கணேசன்
கைது செய்யப்பட்ட கணேசன்

திருவாடானை: திருவாடானை அருகே தாய் இரண்டு குழந்தைகளை தாய் நீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் திடீா் திரும்பமாக தந்தையும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (35). இவரது மனைவி சுகன்யா (27). இவா்களுக்கு நியா சந்தோஷ்கா(3) என்ற பெண் குழந்தையும், சாய் கிருத்திகேஷ் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தனா். குடும்பப் பிரச்னை காரணமாக 2 குழந்தைகளையும் வெள்ளிக்கிழமை, தாய் சுகன்யா குளத்தில் முழ்கடித்து கொலை செய்தாா். கணவா் கணேசன் அளித்த புகாரின் பேரில் சுகன்யாவை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். இந்நிலையில் சுகன்யா மனநலம் பாதிக்கப்பட்டதற்கு அவரது கணவா் தான் காரணம் என திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதன்பேரில் குழந்தைகளின் தந்தை கணேசனை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com