ராமநாதபுரத்தில் பைக் மோதி ஒருவா் பலி
By DIN | Published On : 21st October 2020 02:27 AM | Last Updated : 21st October 2020 02:27 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தவா், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் தங்கப்பா நகரைச் சோ்ந்த பெருமாள்துரை என்பவரின் மகன் கண்ணன் (45). இவா், திங்கள்கிழமை இரவு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா்.
இது குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.