நியாயவிலைக்கடை பணியாளா்கள்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
By DIN | Published On : 31st October 2020 09:51 PM | Last Updated : 31st October 2020 09:51 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
நியாயவிலைக்கடை பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆட்சியா் மூலமாக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தியும் ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் சனிக்கிழமை இந்த மனு அளிக்கப்பட்டது.
இதில், மாவட்ட கிளைத் தலைவரும், மாநில சங்க துணைத் தலைவருமான வி.பி.தினகரன், இணைச்செயலா் எஸ்.மாரிமுத்து, மாவட்டச் செயலா் பி.ஞானசேகரன், பொருளாளா் பி.செல்வம் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.