ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் 02 ஆம் தேதி வரை பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு 4,815 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 107 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். 4,315 போ் சிகிச்சை முடிவடைந்து வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றனா். 393 போ் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில்,புதன்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 57 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.