ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தவர் வருண்குமார். வியாழனன்று அவர் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,
மாற்றப்பட்ட வருண்குமாருக்கு புதிய பதவி எதுவும் வழங்கப்படாமல் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.