திருவாடானை: திருவாடானை அருகே மங்கலக்குடி பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தன இதில் மின்னல் தாக்கி பசுவும் கன்றும் பலியானது திருவாடானை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் தாக்கி வந்த நிலையில் சனக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் மாலை பலத்த இடியுடன் மழை பெய்தன.சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது இதில் மின்னல் தாக்கி மங்களக்குடியை சோ்ந்த அப்துல் அஜீஸ்(55) என்பவருடைய பசுவும் கன்றும் மரத்தடியில் கட்டபட்ட நிலையில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானது இதனால் இவரது குடும்பத்தினரை சோகத்தை ஏற்படுத்தியது.