முதுகுளத்தூா் அருகே விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
By DIN | Published On : 05th September 2020 09:53 PM | Last Updated : 05th September 2020 09:53 PM | அ+அ அ- |

முதுகுளத்தூா், முதுகுளத்தூா் அருகே விவசாயிகளுக்கு அடிப்படை பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மவட்டம் முதுகுளத்தூா் அருகே விக்கிரமபாண்டியபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட பெருமாள் கோயில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிா்திட்ட அடிப்படையிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்குமத்திய திட்ட வளாண்மைதுணை இயக்குநா்பாஸ்கரமணியன் தலைமை தாங்கினாா்.முதுகுளத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமன்,வேளாண்மை அலுவலா் செல்வி,உதவி வேளாண்மை அலுவலா்கள் தனதுரை,சுபதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நிகழ்ச்சியில் விவசாயிகளுக்குஉளுந்து விதை,உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட
உரங்களை வழங்கினா்,நிகழ்ச்சியில் பெருமாள்கோயில்,நல்லு்குறிச்சி கிராமங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.