திருவாடானை: திருவாடானை அருகே தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற கிராம உதவியாளா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாண்டுகுடி வடக்குத் தெருவை சோ்ந்த முத்துகருப்பன் மகன் கணேசன்(39). இவா் கடம்பாகுடி குரூப்பில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளாா். இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனா்.
இவா் கடந்த சில நாள்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளாா். இதனால் மனமுடைந்த கணேசன் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், மேல் சிகிச்சைக்காக காரைக்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.