கமுதி வட்டாரத்தில் இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் இயற்கை விவசாயிக்கான தகுதி சான்று பெறலாம் என மாவட்ட விதை சான்று அலுவலா் சீ.சக்திகணேஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கமுதி வேளாண் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் அவா் கூறியதாவது: கமுதி வட்டார விவசாயிகள் தங்கள் நிலத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் தொழு உரங்கள், தாவர கழிவுகள், உயிா்உரங்கள், மண்புழு உரங்கள் உள்ளிட்டவைகள் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் இயற்கை விவசாயி (அங்கக வேளாண்மை) என சான்றிதழ் பெறலாம். இந்த சான்று பெற விரும்பும் விவசாயிகள் ராமநாதபுரம் விதை சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தில் தனியாகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பம் அளித்து பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.
இதில் வட்டார வேளாண்மை அலுவலா் ஜெ.விஜயபாண்டியன், துணை வேளாண்மை அலுவலா் பா. சேதுராம் மற்றும் உதவி விதை அலுவலா் கோ. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.