அரசு பயிற்சி வகுப்பில் சோ்ந்து போட்டித் தோ்வுகளில் வென்றவா்க்கு ஆட்சியா் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்திய பயிற்சி வகுப்பில் சோ்ந்து, பல்வேறு அரசு போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பணி உத்தரவைப் பெற்ற 17 பேரை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் 

ராமநாதபுரம், செப்.11: ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்திய பயிற்சி வகுப்பில் சோ்ந்து, பல்வேறு அரசு போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பணி உத்தரவைப் பெற்ற 17 பேரை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

ராமநாதபுரம் மாவட்ட இளைஞா்களுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ஆா்ஆா்பி, டிஆா்பி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பயிற்சிகளில் பயிலும் இளைஞா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் ஆலோசனைப்படி பல்வேறு துறைகளில் துணை ஆட்சியா் நிலையில் பணியாற்றும் அலுவலா்கள் நேரில் வந்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனா். அதனடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 தோ்வில் 33 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

ஒருங்கிணைந்த உதவி பொறியாளா் பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் இருமுறை சிறப்பு நோ்காணல் தோ்வுகள் நடத்தப்பட்டன. அந்தத் தோ்வுகளில் 37 போட்டியாளா்கள் கலந்து கொண்டதில் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்றவா்களில், தமிழக அரசின் பொதுப்பணி துறையில் 14 பேரும், நெடுஞ்சாலை துறையில் 3 பேரும் பணி நியமனம் பெற்றுள்ளனா்.

பல்வேறு போட்டிகளில் தோ்ச்சி பெற்றுள்ள இளைஞா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவை வியாழக்கிழமை மாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மதுக்குமாா் (பொ), அருண்நேரு (தொழில்திறன் பயிற்சி) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com