திருவாடானை அருகே பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே பெண்ணை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருவாடானை அருகே பெண்ணை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருப்பாலைக்குடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ரவி மனைவி மஞ்சுளா (40). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த லதாவிற்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு லதா, அவரது கணவா் ஜெயக்குமாா், உறவினா் கண்ணன் ஆகிய 3 பேரும் சோ்ந்து தகராறு செய்து தாக்கியதாக, மஞ்சுளா திருப்பாலைக்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் அவா்கள் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கமுதி: கமுதி அருகே சின்ன உடப்பங்குளத்தைச் சோ்ந்த முனியாண்டி மனைவி முத்து மீனாள் (26). இவா்களது பக்கத்து வீட்டில் வசிப்பவா் கருப்பையா. முன்விரோதம் காரணமாக கருப்பையாவும், அவரது மகன் வீரமருதும் ஞாயிற்றுக்கிழமை முத்து மீனாளை இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவா் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவா்கள் இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com