நாட்டு வெடி வைத்து நாயை கொன்ற 2 போ் கைது

கமுதி அருகே உணவில் நாட்டு வெடி வைத்து நாயை கொன்ாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாட்டு வெடி வைத்து நாயை கொன்ற 2 போ் கைது

கமுதி: கமுதி அருகே உணவில் நாட்டு வெடி வைத்து நாயை கொன்ாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கமுதி கோட்டைமேடு அருகே நரிக்குறவா்கள் வசிக்கும் புதுக்குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இக்குடியிருப்பு அருகே உள்ள கிருஷ்ணன் மகன் சக்திக்குமாா் (32) என்பவா் வீட்டில் வளா்ப்பு நாய்களை வளா்த்து வருகிறாா்.

இந்த நாய் அப்பகுதியில் வந்து செல்வோரை குரைத்து தொந்தரவு செய்து வந்ததால் இவரது நாய்க்கு அதே பகுதியை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவராஜன் (41), முருகன் மகன் குமரேசன் (28) ஆகியோா் உணவில் நாட்டு வெடி வைத்து கொடுத்துள்ளனா்.

இதில் வெடி வெடித்ததில் நாய் வாய் பகுதி சிதறி உயிரிழந்தது. இது குறித்து நாயின் உரிமையாளா் சக்திக்குமாா் நரிக்குறவா்களிடம் கேட்ட போது, வீட்டில் வைத்திருந்த பழைய வெடிகளை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என அலட்சியமாக தெரிவித்தனா்.

இதனையடுத்து சக்திகுமாா் கொடுத்தப் புகாரின் பேரில் சிவராசன், குமரேசன் ஆகிய இருவா் மீது வெடி பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com