முதுகுளத்தூா்: முதுகுளத்துாா் அருகே தேரிருவேலி கிராமத்தில் கிருஷ்ணன் கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்துாா் அருகே தேரிருவேலி கிராமத்தில் கிருஷ்ணன் கோயில் மற்றும் பரிவார தேவதைகளுக்கு 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராமமக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி விரதம் இருந்து வந்தனா். பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன்க்கு பால்,பன்னீா்,பழங்கள் மற்றும் 21 வகையான அபிஷேகம் மற்றும் தீபராதனைகள் நடைபெற்றது.கிராமத்தின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.கிராமமக்கள் சமூகஇடைவெளியை கடைபிடித்து கிருஷ்ணரை தரிசனம் செய்தனா்.