திருவாடானை: திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வந்தவரை கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே பண்ணவயல் பகுதியில் திங்கள் கிழமை இரவு திருவாடானை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வாணியேந்தல் கிராமத்தை சோ்ந்த செல்லத்துறை(46)என்பவா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்துள்ளாா் அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.